மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்!

திருப்பத்தூர், ஜுலை 16 -

அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னி லையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட  மின்னணு வாக்கு இயந்திரத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இருந்தும் மின்னணு வாக்கு இயந்திரங்களை  கண்டெய்னர் மூலம் கொண்டுவரப்பட்டு மாவட்ட ஆட்சி யர் முன்னிலையில் திருப்பத்தூர் பகுதி யில் அமைந்துள்ள மஞ்சள் குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்துக் கட்சி பிரமுகர்களை முன்னிலையில்மின்னணு வாக்கு இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பார்வையிட்டார்.
மேலும் அங்க பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் சரியாக வேலைசெய்கிறதா? எனவும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மாவட்ட தேர்தல் துறை சார்ந்த அதிகாரி கள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் உடன் இருந்தனர்

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad