திருப்பத்தூர் மாவட்டம் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

திருப்பத்தூர் மாவட்டம் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி !

திருப்பத்தூர் மாவட்டம் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி !
திருப்பத்தூர் , ஜுலை 16 -

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தின த்தை முன்னிட்டு அரசு கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் குடும்ப நலத்துறை சார் பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சி யர் சிவசௌந்தரவல்லி பங்கேற்று கொடி யசைத்து துவக்கி வைத்தார். ஆரோக்கி யமான போதிய இடைவெளியுடன்
பிள்ளை பேறு - திட்டமிட்ட பெற்றோர்களு க்கான அடையாளம் மற்றும் உடலும் மனமும் பக்குவம் அடைந்து உறுதியாகும் வயது 21 அதுவே பெண்ணிற்கு திருமண த்திற்கும் தாய்மை அடைவதற்கும் உகந்த வயது என்னும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று சிறு குடும்பம் சுகமான குடும்பம், வீடும் நாடும் நலம் பெற சிறு குடும்பம் ஏற்போம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாச கங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி  விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.

 செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad