உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிதம்பரத்தில் தொடங்கிய முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்  - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஜூலை, 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சிதம்பரத்தில் தொடங்கிய முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார் 

கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ரயில் மார்க்கமாக சிதம்பரம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெருந்துறை காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாளை ஒட்டி அவர் திருவுருவப் படத்திற்கு முதல் தெய்வம் மரியாதை செலுத்தினார் பின்னர் சிதம்பரம் உங்க ஸ்டாலின் என்ற புதிய திட்டத்திற்கு முகாமினை தொடங்கி வைத்து சிதம்பரம் வட்டம் லால்புரத்தில் கட்டப்பட்டுள்ள இளையபெருமாள் அவர்களின் திருவுருவ சிலையை சிலையை நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்தார் 

 
இந்த பயணத்தின் போது கடலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் இடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாண்பு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக நிறைவேற்றி அறிவிப்புகளை வெளியிட்டார் 

 
நடராஜர் கோவில் அண்ணாமலை பல்கலைகழகம் போன்ற பல சிறப்புகளைப் பெற்றுள்ள சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தில்லை அம்மன் ஓடை மற்றும் காஞ்சாகி கால்வாய் ஆகியவற்றை ஒட்டி புதிய இணைப்பு சாலை ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் 

 
வட மாவட்டங்களில் உள்ள அனைத்து பழங்குடியினர் பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அரிசிபெரியா குப்பத்தில் புதிய உண்டு உறைவிட பழகுடினர் பள்ளி ஒன்று தொடங்கப்படும் 

 
காட்டுமன்னார்கோயில் வட்டத்திலிருந்து புதிய பிரிக்கப்பட்டுள்ள ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திற்கு  டெல்டா பகுதியாக அறிவிக்கப்படும்

 
வீராணம் ஏரி சுற்றுலா வளர்ச்சி ஊக்குவிக்கும் வகையில் சோழதரத்திலிருந்து ராஜமதகு வரை படகு சவாரி மேற்கொள்ளவும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை அமைத்திடவும் 10 கோடி ரூபாய் செலவில் ஏறி தூர்வாரும்  பணிகள் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் 

 
சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அவர்கள் கோரிக்கையை ஏற்று ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில்  கூடுவெளியில் புதிய திறன் மேம்பாட்டின் நிலையமும் தொழில்பட்டையும் அமைக்கப்படும் 

 
கடலூர் குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதியில் வாழும் மகளிர் வேலை வாய்ப்புகளை அளிக்கும் முறையில் குறிஞ்சிப்பாடி அருகில் இருக்கும்  கொடுங்கன்பாளையத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலனி மட்டும் காலணிகளுக்கான உதிரி பாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்த முதல்வர் மு க ஸ்டாலின் 

 
கடலூர் மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு செய்தியாளர்
 Pஜெகதீசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad