இன்று தமிழகமெங்கும் மக்களின் வீடு தேடி அரசு துறைகளில் சேவையை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின் மூலம் தமிழகமெங்கும் 10 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன ஊரகப் பகுதிகளில் 15 அரசு துறையின் மூலமாக 46 விதமான சேவைகளும் நகர்ப்புறங்களில் 13 அரசு துறைகள் மூலமாக 43 விதமான சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கூட்டுறவுத் துறையின் சார்பாக ஜகதலா பேரூராட்சி குன்னூர் பகுதி ஷோலடா மட்டம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் வழங்கப்படுகின்ற சேவைகள் குறித்து நீலகிரி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் திரு ரா தயாளன் அவர்கள் நேரில் சென்று மேற்பார்வை விட்டார் இம் முகாமில் கூட்டுறவுத் துறையின் சார்பாக குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் கூட்டுறவு வங்கிகள் மூலமாக சுயதொழில் கடன் கால்நடை பராமரிப்பு கடன் மகளிர் சுய உதவி குழு கடன் ஆகியவைகளுக்கான விண்ணப்பம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன இம் முகாமில் கூட்டுறவு சார் பதிவாளர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக