திண்டுக்கல்லில் ரயிலில் 16 கிலோ குட்கா& புகையிலை பொருள் பறிமுதல்!
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த புருலிய (மேற்குவங்காளம்) to திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆகஸ்ட் 6 இன்று காலை திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் மருதராஜ், மணிமாறன், மதன்ராஜ் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர், முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருந்தது.அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக