தொண்டு மன்றம் சார்பில் 78வது சுதந்திர தினம் முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் நுரையீரல் பரி சோதனை முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

தொண்டு மன்றம் சார்பில் 78வது சுதந்திர தினம் முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் நுரையீரல் பரி சோதனை முகாம் !

தொண்டு மன்றம் சார்பில் 78வது சுதந்திர  தினம் முன்னிட்டு மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம் !
குடியாத்தம் , ஆகஸ்ட் 3 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையத் துடன் இணைந்து 0.3. 08.2025 ஞாயிற்றுக் கிழமை அன்று குடியாத்தம் கணபதி நெச வாளர் நகர் லிங்குன்றத்தில் நடை பெற்றது வேலூர் மாவட்ட கொடிகாத்த  குமரன் தொண்டு மன்றஅவைத்தலைவர் 
ப.ஜீவானந்தம் அவர்கள் தலைமையில் பொதுச் செயலாளர் முனைவர்வே வினா யகமூர்த்தி  அவர்களின் தொடக்க உரை யுடன் நடைபெற்றது தொண்டு மன்ற துணைத் தலைவர் மா.கோ.ஞானசேகர் அனைவரையும் வரவேற்றார். லிங்குன் றம் ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி நாயகி ஜடையப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி சந்திர சேகர், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர்இர.அன்பரசன்,திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி தலைமையா சிரியர் க.செந்தில்குமார், ஆசிரியர் ஜெ. தமிழ்ச்செல்வன், ஈசன் அறக்கட்டளை சக்திவேல்,சமூக ஆர்வலர் நபீஸ் அகமது ஊர் பெரியவர் கோவிந்தசாமி ஆகியோர் கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர
கொடிகாத்த குமரன் தொண்டு மன்ற  பொருளாளர் கோ.ஜெயவேலு, துணை பொதுச்செயலாளர்ப.பொன்னரசு,இளஞரணி ஆகாஷ்,அஜீத்,தரணி மற்றும் ஏ.கி. திகழரசு ஆகியோர்கள் முகாமிற் கான ஏற்பாடுகளைசெய்திருந்தனர்.இம்முகாமில் கண் புரை,நுரையீரல் பரிசோத னை,ரத்த கொதிப்பு மற்றும் சர்க்கரை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட் டது.நூற்றுக்கும் பேற்பட்டவர்கள் பங்கேற்ற மருத்துவ முகாமில் இருபது பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்ய சென்னை டாக்டர் அகர்வால் கண் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்து செல் லப்பட்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad