இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 9வது அகில இந்திய மாநாட்டில் தமிழக த்திலிருந்து நிர்வாகிகள் தேர்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 9வது அகில இந்திய மாநாட்டில் தமிழக த்திலிருந்து நிர்வாகிகள் தேர்வு!

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்  9வது அகில இந்திய மாநாட்டில் தமிழக த்திலிருந்து நிர்வாகிகள் தேர்வு!
 
வேலூர் , ஆகஸ்ட் ‌11 -

வேலூர் மாவட்டம் இந்தியப் பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பின்  9வது அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய தலைவராக சிஎன் பாரதியும் பொதுச் செயலாளராக சாவா ரவியும் பொருளாளராக டி. எ. கே. ஷபியும் தமிழ்நாட்டில் இருந்து அகில இந் திய துணைத் தலைவராக ச.மயில் அகில இந்திய செயலாளராக முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் அ.மாயவன், அகில இந்திய செயற்குழு உறுப்பினராக வேலூ ரைச் சார்ந்த முனைவர் செ. நா. ஜனார்த் தனன் உள்ளிட்டோர்தேர்ந்தெடுக்கப்
பட்டனர்.மாநாட்டிற்கு  தேசிய தலைவர் கே.சி.அரிகிஷ்ணன் தலைமை தாங்கி னார்.  தேசிய பொதுச் செயலாளர் சந்திர நவ்தீப் பார்தி, வேலை அறிக்கை சமர்பி த்து பேசினார்.  பொருளார் பிரகாஷ் சந்திரமோகன்தி, நிதிநிலை அறிக்கை சமர்பித்து பேசினார்.  இணை பொதுச் செயலாளர் சுகுமார் பெய்ன், முன்னிலை வகித்தார்.கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர்களாக தமிழ்நாட் டைச் சேர்ந்த  தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத் தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த் தனன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் அ. சங்கர்,  தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலா ளர் எஸ். அன்பழகன், தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் எம்.மணிமேகலை, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் சி.ஜெ யக்குமார், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் சிவஶ்ரீ ரமேஷ்,   தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் உதயசூரியன், தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கத் தின் மாநிலத்தலைவர்எஸ்.ஞானசேகரன்
 ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
 ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் நிர்வாகிகள் ஆ. ஜோசப் அன்னையா நல் ஞானசேகரன்  எஸ். ரஞ்சன் தயாள தாஸ், செ.சரவணன்  பெ.சே.அமர்நாத்,  டேவிட் ராசன், சீனிவாசகன் பிரபாகரன் குலாம் தஸ்தகீர்  உட்பட 65பேர் தமிழகத்திலிரு ந்து கொல்கத்தா மாநாட்டில் பங்கேற்ற னர்.இந்த மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, திரிபுரா, பஞ்சாப், ஹரியானா, நாகாலாந்து, ஜம்மு, காஷ்மீர், ஜார்கன்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து 600 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தீர்மானங்கள்.
 ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டதினை யும் புதிய ஓய்வூதிய திட்டத்தினையும் ஒன்றிய அரசு உடனடியாக இரத்துசெய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியதிட்டம் நடைமுறைபடுத்திட இந்திய அரசை கோ ருதல் அகில இந்திய மாநாட்டில் மகளிர் மற்றும் பெண்களுக்கான உரிமைகளும் பாதுகாப்பும் குறித்து கருத்தரங்கம் மற் றும் பொதுக்கல்வியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் வாயி லாக அரசுக்கு கோரிக்கை வைப்பது  லிட்டர் பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முகமது சலீம், இந்திய மாணவர் சங்க பொதுச் செயலா ளர் சீசன் பட்டாச்சாரியா, ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad