அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு 11-08-2025 (திங்கட்கிழமை) முதல் நடைபெற உள்ளதாக முதல்வர் முனைவர்.ப.வசந்தி அறிவிப்பு:
அழகப்பா அரசு கலைக் கல்லூரி, காரைக்குடி
காரைக்குடி, அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு முதுநிலை பாடப்பிரிவுகளான எம்.ஏ. தமிழ்,ஆங்கிலம்,வரலாறு, பொருளியல் , எம்.காம். வணிகவியல், எம்.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், மற்றும் புவி அமைப்பியல் முதலான துறைகளுக்கு முதற்கட்ட கலந்தாய்வு 11-08-2025 (திங்கட்கிழமை) மற்றும் 13.08.2025 (புதன் கிழமை) ஆகிய தேதிகளில் காலை 9.30 மணியளவில் கல்லூரியின் சம்பந்தப்பட்ட துறைகளில் நடைபெற இருக்கிறது. 11-08-2025 அன்று காலை 9.30 மணியளவில் விளையாட்டு, முன்னாள் இராணுவத்தினர், தேசிய மாணவர் படை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் அனைத்து முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான பொதுக்கலந்தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து 13-08-2025 அன்று காலை 9.30 மணியளவில் பொதுக் கலந்தாய்வு நடைபெறும். இக்கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்ட மாணாக்கர்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும். இக்கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் பெற்றோருடன் தங்களின் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், இளநிலைப் பட்டத்தின் ஆறு பருவ அல்லது மொத்த மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், இணைய வழியில் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ், தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மாணவ, மாணவியர் பெயரிலான வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், சிறப்புப் பிரிவினராக இருப்பின் அதற்குரிய அனைத்துச்சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்களையும், நான்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களையும், கல்லூரிக்கு விண்ணப்பித்த விண்ணப்பப் படிவத்தின் அனைத்துப் பக்கங்களையும் உள்ளடக்கிய நகல்கள் இரண்டினையும் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக