சார் ஆட்சியர் உத்தரவு அமுல் படுத்த கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிபிஎம் ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

சார் ஆட்சியர் உத்தரவு அமுல் படுத்த கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிபிஎம் ஆர்ப்பாட்டம் !

சார் ஆட்சியர் உத்தரவு அமுல் படுத்த கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் ஆர்ப்பாட்டம் !
ராணிப்பேட்டை, ஆக 4 - 

ராணிப்பேட்டை மாவட்டம் சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் கடந்த 2019 மே 2 அன்று வழங்கிய உத்தரவு
அமுல் படுத்த கோரி தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணி மற்றும் சிபிஎம் சார்பில் திங்களன்று (ஆக 4) மாவட்ட தலைவர் பி. ரகுபதி தலைமையில் முத்து க்கடை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சார் ஆட்சியர் உத்தரவு அமுல் படுத்த கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஎம் சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடை பயணம் தொட ங்கி வாலாஜா வட்டாட்சியர் அலுவலகம் வரை கவன ஈர்ப்பு நடைபயணம் காவல் துறை மறுத்ததன் அடிப்படையில் முத்துக் கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
இதில் தீ.ஒ.மு. மாநில தலைவர் த. செல்ல க்கண்ணு, மாநில து.செயலாளர் பி. செல் வன், மாவட்ட செயலாளர் எபிஎம். சீனிவா சன், மூத்த தோழர்கள் டி. சந்திரன்,  எல்.சி. மணி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என். காசிநாதன், தா.  வெங்கடேசன், எஸ்.  கிட்டு, ஆர். மணிகண்டன், ஆ. தவ ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண் டன உரையாற்றினர். இறுதியாக சத்திய மூர்த்தி நன்றி கூறி முடித்து வைத்தார்.
கோரிக்கைகளாக, வாலாஜா, அம்பேத்கர் நகர், வழி பாதை மறித்து கட்டப்பட்ட தீண் டாமை சுவர் அகற்ற வேண்டும். சர்வே எண். 2038/2 சர்க்கார் நத்தத்தில் அமைந் துள்ள இரும்பு கேட் சுவற்றை அகற்ற சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் உத்தரவு அமுல் படுத்த வேண்டும். சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பேசி முழக்கங்களை எழுப்பினர். இறுதி யாக ராணிப்பேட்டை வருவாய் கோட்டா ட்சியரிடம் கோரிக்கை மனு அளித்து தலைவர்கள் பேசினார்கள்.

 மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad