பந்துலூர் டியுஸ் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான சுகாதார விழிப்புணர்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

பந்துலூர் டியுஸ் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான சுகாதார விழிப்புணர்வு


பந்துலூர் டியுஸ் மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கான சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ரன், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சுதந்திர நாத் தலைமை தாங்கினார்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஆல் தி சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


மேங்கோரஞ் மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஷர்மிளா பேசும்போது பெண்கள் சுகாதாரம் என்பது உடல் ஆரோக்கியம், மன நலம், சுத்தமாக இருத்தல் ஆகியன அடங்கும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது உடல் உறுப்புகளை மேம்படுத்தி தரும். இதனால் வாழ்நாளில் நோய்கள் இன்றி உடல் நலத்துடன் இருக்க முடியும்.  அதுபோல நல்ல உறக்கம், விளையாட்டு உடற்பயிற்சி ஆகியனவும் உடல் மற்றும் மன நலனை பாதுகாக்கும். எனவே மாணவிகள் தங்களின் உடல் நலனை பாதுகாக்க அக்கறை கொள்ள வேண்டும். பருவ காலத்தில் ஏற்படும் உடல் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு மனதில் ஏற்படும் மாற்றங்களை நல்ல வழிகளை மட்டும் பின்பற்றி வர வேண்டும் என்றார். 


நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad