தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி, சுயநிதி பாடப்பிரிவில் வகுப்பு நேரம் மாற்றப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவில் கடந்த 2024 ஆண்டு வகுப்பு நேரம் காலை 08.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இருந்தது. தற்போது மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்பு நேரத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீண்டும் பழைய நேரப்படி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் (SFI) மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக