சோலூரில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய தோடரின மக்கள் வலியுறுத்தல்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

சோலூரில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய தோடரின மக்கள் வலியுறுத்தல்:

 


சோலூரில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய தோடரின மக்கள் வலியுறுத்தல்:


ஊட்டி சோலூர்‌ கிராமத்தில்‌ திறக்கப்பட்டுள்ள மதுபான கடையை‌ இடமாற்றம்‌ செய்ய கோரி தோடரின மக்கள் மனு அளித்தனர். நீலகிரி மாவட்டம் சோலூர்‌ பேரூராட்சிக்குட்ப்பட்ட பகுதியான கோணக்கட்டி பாலம்‌ அருகில்‌ அரசு டாஸ்மாக்‌ மதுபான கடை ஒன்று உள்ளது. 


சோலூருக்கு‌ செலக்கல்‌, தூபக்கண்டி, கோக்கல்‌, கொட்டலைன்‌, கன்னேரிமூக்கு ஆகிய பகுதிலிருந்து அந்த வழியாக சோலூர்‌ பள்ளி அமைந்துள்ளதால்‌ பள்ளி மாணவ மாணவிகள்‌ டாஸ்மாக்‌ கடை வழியாக செல்ல வேண்டியுள்ளது அந்த வழியாவே ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. 


குடி பிரியர்கள்‌ சாலை ஓரத்தில்‌ அமர்ந்து மது அருந்தி கொண்டு பொது மக்களுக்கும், பள்ளி மாணவ மாணவிகளுக்கும்‌ இடையூறு செய்து வருகின்றனர்‌ மேலும்  அங்கு இயங்‌கி வரும்‌ மதுபான கடை கட்டிடம்‌ மிகவும்‌ மோசமான நிலையில்‌ உள்ளது


எனவே, அந்த கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தோடர் சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில்  நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்களிடம்  மனு வழங்கினார்கள்


மனுவில் பொதுமக்களுக்கும்‌ பள்ளி மாணவ மாணவிகளுக்கும்‌ இடையூறாக உள்ளஅந்த மது பான கடையை வேறு இடததுக்கு இடமாற்றம்‌ செய்ய டாஸ்மாக்‌ நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்                  


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad