குடியாத்தம் ஒன்றியம் அனங்காநல்லூர் ஊராட்சியில் உள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பரிசளிப்பு நிகழ்ச்சி!
குடியாத்தம் , ஆகஸ்ட் 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் அனங்காநல்லூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் அதிக மதிப் பெண் பெற்ற மாணவிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாராட்டி பரிசுகள் வழங் கினார் இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேகர் தலைமை தாங்கினார்
இப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ரம்யா அவர்களுக்கு ரூபாய் 5000 இரண்டாம் மதிப்பெண் பெற்ற தாட்சாயணிக்கு 3000 ரூபாய்
மூன்றாம் மதிப்பெண் பெற்ற ஷர்மிளாவு க்கு ரூபாய் 2000 பரிசு தொகையை ஊரா ட்சி மன்ற தலைவர் செண்பகவல்லி முருகேசன் தன் சொந்த செலவில் வழ ங்கி பாராட்டி சால்வைகள் அணிவித்தார்
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் வெங்கட் குமார் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமாரி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக