ஈரோடு ஜவுளி வார சந்தையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா வியாபாரிகள் குவிந்தனர். ஈரோட்டில் வாரம் தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி வார சந்தை கூடுவது வழக்கம். தென்னிந்தியாவில் புகழ்பெற்ற இந்த ஜவுளி வார சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள்.
அதேபோல் நேற்று இரவு ஈரோடு
காந்திஜி ரோடு, ஸ்டேட் வங்கி
ரோடு, சென்ட்ரல் தியேட்டர் ஆகிய
பகுதிகளில் வாரச்சந்தை கூடியது.
இதில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல்
உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த
ஏராளமான வியாபாரிகள் கடைகளை
அமைத்திருந்தனர். காட்டன் நடைகள்,
சட்டைகள், சுடிதார்கள், வேட்டிகள்,
சேலைகள், டீ சர்ட் உள்ளிட்ட
அனைத்து வகையான ஆடைகளும்
விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன.
விடிய விடிய நடந்த சந்தையில்
ஜவுளியை கொள்முதல் செய்வதற்காக
ஏராளமான உள்ளூர், வெளியூர்
வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் தங்களது வியாபாரத்துக்குத் தேவையான ஆடைகளை மொத்தமாக கொள்முதல் செய்தனர். இதனால் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் வழிபாடு நடப்பதால் மஞ்சள், சிவப்பு, கவி நிற பேட்டிகள் அதிகமாக விற்பனையானது. இதே நிறங்களில் சேலைகளும் அதிக அளவில் விற்பனையானது.
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக