குடியேற்றம் நகரில் திருக்குறள் திருப் பணி பயிற்சி வகுப்பு தொடக்க விழா !
குடியாத்தம் , ஆகஸ்ட் 16 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் தே ஜெயஜோதி வழிகாட்டு தலின்படி குடியேற்றம் பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை ஒருங்கிணைத்து குடி யேற்றம் தங்கம் நகரில் உள்ள சாதனை கல்வி மையத்தில் பயிற்சிக்கான தொ டக்க விழா 15.8.25 வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உலக திருவள்ளுவர் பேரவை தலைவர் வைர ஜெ. அன்பு தலைமை தாங்கினார் திருக் குறள் திருப்பணிக்குழு பொறுப்பாளர்
முனைவர் பா .சம்பத்குமார் வரவேற்புரை வழங்கினார். பாவேந்தர் பேரவை செய லாளர் புலவர் சு மோகன் குமார் சிறப்பு ரையாற்றினார். தமிழ் இயக்க நகரச் செய லாளர் ஜெ. தமிழ் செல்வன், ஒன்றியச் செயலாளர் முனைவர் மோ.மது பள்ளி கொண்டா தேர்வுநிலைச் செயலாளர் சண்முக பாலசுந்தரம் உலக திருவள்ளு வர் பேரவை பொருளாளர் இர.ஜெயக் குமார் , கிரீன் வேலி பள்ளிகள் தலைவர் ஜாவித், தாளாளர் முனைவர் ஆயிஷா ஜாவித், ஆசிரியர் பார்வதி ஆசிரியர் சிவசங்கரி ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர்.பேர்ணாம்பட்டு இஸ்லாமியாபள்ளி முதுகலைத் தமிழாசிரியர் புலவர் பா.முக மது அலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங் கினார். சாதனை கல்வி மையங்களின் முதல்வர் லோ. ஜமுனாசம்பத்குமார் நன்றி கூறினார். விழாவில் திருக்குறள் பயிற்சி மாணவர்கள்பெற்றோர்கள் தமிழ் ஆர்வலர்கள் அரசு மற்றும் தனியார்பள்ளி ஆசிரியர்கள் என, 90க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் சனிக்கிழமை தோ றும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை 30 வாரங்கள்திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு நடைபெறும். பயிற்சி நிறைவில் அனைத்து பயிற்சி மாணவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கப்படும்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக