தேவகோட்டையில் தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்டுத்தர வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

தேவகோட்டையில் தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்டுத்தர வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு.


தேவகோட்டையில் தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்டுத்தர வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் பஞ்சாயத்து மைக்கேல்பட்டி கிராம பொதுமக்களின் நிலங்களை தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி கோட்டாட்சியரிடம் கிராம பொதுமக்கள் மனு கொடுத்தனர். மைக்கேல் பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகளாக நான்கு தலைமுறைகளுக்கு மேல் அனுபவித்து வரும் நிலங்களை மோசடியாக பத்திர பதிவு செய்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வருபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, மோசடியாக பதிவு செய்துள்ள பட்டாவை ரத்து செய்தும், கிராம மக்கள் பெயரில் பட்டாவை மாற்றம் செய்ய உத்தரவிட கோரி 200க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கைக் குழந்தைகளுடன் வந்து, விவசாய தொழிலாளர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து தங்கள் கோரிக்கையை கோட்டாட்சியரிடம் மனுவாக அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad