கடலூர் மாவட்டம் வடலூரில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 73 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சுமார் 500 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனா பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.
தேமுதிக வடலூர் நகர செயலாளர் சாகிர் உசேன் தலைமையில் நடைபெற்ற விழாவில் நகர தலைவர் பசுபதி நகர பொருளாளர் வடிவேலு நகர துணை செயலாளர் ஏழுமலை கந்தன் மாவட்ட பிரதிநிதி வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக