சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு மகா பட்டு மாரியம்மன் குளம் பஞ்சாயத்தில் சில ஆண்டுகாலமாக கட்டுப்பாட்டில் உள்ளது மீண்டும் கோயில் நிர்வாகத்திற்கு ஒப்படைக்க கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு மகா பட்டு மாரியம்மன் குளம் பஞ்சாயத்தில் சில ஆண்டுகாலமாக கட்டுப்பாட்டில் உள்ளது மீண்டும் கோயில் நிர்வாகத்திற்கு ஒப்படைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தவர்த்தாம்பட்டு கிராமத்தில் அருள் பாலித்து வரும்  ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் ஆலயம் உள்ளது இதற்கு எதிர் புறம் குளம் உள்ளது இந்தக் குளம் நூறு வருடங்களுக்கு முன்பே கிராம வரைபடத்தில் மாரியம்மன் கோயில் குளம் என்று பதிவேட்டில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும் 



கீழ்கண்ட திட்டங்களுக்கு கோயில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொது மக்களிடம் ஒப்புதல் கேட்கப்பட்டது அங்கு வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி இல்லாமல் இருந்தது மண் அரிப்பு ஏற்பட்டது இதன் காரணமாக தடுப்பு சுவர் கட்டி அங்கு வசிக்கும் மக்கள் சாலை வசதி மேம்பட அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது 2007 எட்டாம் ஆண்டில் அகம் திட்டத்தின் மூலம் 2009ஆம் ஆண்டு ஒன்றிய பொது நிதியில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டது குடிமராத்து பணி செய்யப்பட்டு சாலை மேம்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

 

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பள்ளிக்கூடம் கட்ட நிலம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது இதுபோன்று பல தொண்டுகள் செய்து வருகின்றனர் 


இந்தக் குளத்திற்கு இராஜன் வாய்க்காலில் இருந்து பாசன வாய்க்கால் உள்ளது மேலும் வடிகால் வசதி தற்போது வரை இல்லை ஏற்ப்படுத்தவில்லை


 தற்போது குளம் சுற்றியும் கருவேலை மரங்கள் சூழ்ந்துள்ளது குளத்தில் துர்நாற்றம் வீசுகின்றது பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது



 இந்தக் கோயில் பழமையான மாரியம்மன் கோவில் பராமரிப்பு இன்றி காணப்பட்டது அதன் பிறகு 2014 ஆண்டில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மறு சீரமைக்கப்பட்டது இந்த காலகட்டத்திற்கு முன்பு 20 வருடங்களாக பஞ்சாயத்தில் கையகப்படுத்தப்பட்டது குளம் இதை தற்போது மீண்டும் ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்துள்ளனர் இதுகுறித்து நேரில் வந்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை கூறுகின்றனர் மேலும் பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள குளம் கோயில் பராமரிப்பு பணிகள் தினசரி பூஜைகள் நடத்திட குத்தகை விட்டு வருவாய் மூலம் நடத்திட மாரியம்மன் குளமாக ஒப்படைக்க கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் இந்து முன்னணி அமைப்பினர் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் போராட்டம் மேற்கொள்ளப்படும் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad