பேராவூரணி அருகே தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் ஒருவர் கைது, ஒருவர் தப்பியோட்டம்
பேராவூரணி அருகே அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய மற்றொருவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கழுமங்குடா கடற்கரை கிராமத்தில், தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் எம்.ஆனந்த்குமார் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில், வனவர் ராஜ்குமார், வனக்காப்பாளர்கள் பாரதிதாசன், ராக்கேஸ் பெர்நாத் மற்றும் வேட்டை தடுப்புக் காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நீல நிற கேனை சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட 383 எண்ணிக்கையிலான கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது.
கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த, கழுமங்குடா பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர் மகன் கண்ணுச்சாமி (வயது 63) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவருடைய மருமகனான கார்மேகம் மகன் காளிமுத்து (வயது 40) என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு வன உயிரின சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு பேராவூரணி நீதிமன்றத்தில் கண்ணுசாமி ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோடிய காளிமுத்துவை வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பேராவூரணி நிருபர் நீலகண்டன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக