மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக குரு பங்காரு அடிகளார் அவர்களுக்கு ஈரோடு நால்ரோடு அருகே உள்ள எல் கே எம் மருத்துவமனையில் இருந்து கலைமகள் பள்ளி செல்லும் குமாரசாமி வீதியில் உள்ள குரு பீடத்திற்கு திருக்குடமுழுக்கு விழா நடைபெற்றது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க துணை பெருந்தலைவர் செந்தில்குமார் பங்காரு அடிகளார் குருபீடம் திருக்குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தார். ஐந்து கால வேள்வி பூஜையில் வைக்கப்பட்டுள்ள கலசங்களின் புனித நீரால் திருக்குட முழுக்கு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு குருவின் உருவம் பதித்த குரு கொடியை விழாவில்
ஏற்றி வைக்கப்பட்டது. புனித கலச
நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு 162 இலவச
திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.
சமுதாயப் பணியாக ஈரோடு மாவட்ட
மாற்றுத் திறனுடையோர் நலச்சங்க
உறுப்பினர்களுக்கு நிவாரண
பொருளாக மளிகை சாமான்கள்,
மூன்று சக்கர வாகனங்கள், கல்வி
உதவித்தொகைகள், இஸ்திரி
பெட்டி, தையல் மெஷின், லேப்டாப்
போன்றவை நலத்திட்ட உதவிகளாக
வழங்கப்பட்டன. திருக்குடமுழுக்கு விழாவை முன்னிட்டு காலை முதல்
அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை மறு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு மாவட்டம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக