உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 17வது மாதம் அன்ன தானம்!
வேலூர் , செப் 01 -
வேலூர் மாவட்டம் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் 17 வது மாதமாக இன்றுஅன்னதானம் செய்தனர்
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் மக்கள் மற்றும் தேவையுள்ள வர்களுக்கு மதிய உணவு மாதத்தின்
முதல் நாளில் உணவு வழங்க முடிவெடுத் தனர். அதன் அடிப்படையில் இன்று செப் டம்பர் 1-ஆம் தேதி வேலூர் அனைத்து ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் தலைவர் எம்.எம்.மணி தலைமையில் விருதம்பட்டு உதவி ஆய்வாளர் க.ஆதர்ஸ் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்திதன் அவை த்தலைவர் ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் ஆகி யோர் அன்னதானத்தினை துவக்கி வைத் தனர்.
இந்த நிகழவில் செயலாளர் குமரே சன், பொருளாளர் பவன்குமார், குமார் வெங்க டேசன், சிவக்குமார், சுரேந்தர், கே.சாந்த குமார், மற்றும் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். நிகழ்வில் 50 பேருக்கு மரக்கன்று களையும் வழங்கினர் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் 200 பேரு க்கு அன்னதானம் செய்தனர்.அன்னதா னம் 17 மாதங்களாக நடைபெற்று வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக