தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் கீழ்க்கண்ட ஆறு ஓராண்டு கால சான்றிதழ் படிப்புகளில் மொத்தம் 167 இடங்கள் காலியாக உள்ளன: எமர்ஜென்சி கேர் டெக்னீஷியன் – 14, ரெஸ்பிரட்டரி தெரபி டெக்னீஷியன் – 20, அனஸ்தீஷியா டெக்னீஷியன் – 27, தியேட்டர் டெக்னீஷியன் – 26, ஆர்த்தோபீடிக் டெக்னீஷியன் – 35, மல்டி பர்பஸ் ஹாஸ்பிட்டல் வொர்கர்ஸ் – 45.
தகுதிகள்: விண்ணப்பதாரர்கள் 31.12.2025 அன்று 17 வயதைக் கடந்திருக்க வேண்டும்.
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பாடத்திற்கு SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மற்ற அனைத்து பாடங்களுக்கும் HSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை மதிப்பெண் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படியும் நடைபெறும். மேலும் 5% இடஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்படும்.
விண்ணப்பப் படிவங்கள் www.gtkmc.ac.in மற்றும் www.thoothukudi.nic.in ஆகிய இணையதளங்களில் 04.09.2025 முதல் இலவசமாக கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் நிரப்பிய படிவங்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்/துணை முதல்வர் அலுவலகத்தில் 12.09.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்ச்சி பட்டியல் 16.09.2025 அன்று வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை 20.09.2025 முதல் தொடங்கும். மீதமுள்ள இருக்கைகளுக்கான வாக்-இன் நேரடி சேர்க்கை 22.09.2025 முதல் நடைபெறும். முழு சேர்க்கை செயல்முறை 30.09.2025க்குள் நிறைவு பெறும். வகுப்புகள் 06.10.2025 முதல் ஆரம்பமாகும்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் கவுன்சிலிங் (Counselling) நடைபெறும். மாணவர்கள் மூலச் சான்றிதழ்களை – SSLC/HSC மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச் சான்று, சாதிச் சான்றிதழ், வயது நிரூபணச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவக் குழு சான்றிதழ் – சமர்ப்பிக்க வேண்டும்.
சேர்க்கை பெற்ற மாணவர்கள் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் பயன்கள், நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தகுதியானவர்களுக்கு வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 0461-2392698 என்ற உதவி எண் அல்லது deantut@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரி தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக