குடியாத்தம் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் டிப்பர் லாரி மாட்டு வண்டியில்
மணல் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது !
குடியாத்தம் , செப் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் பாலாறு மற்றும் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் டிப்பர் லாரி மாட்டுவண்டி டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் மணல் அல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில்
குடியாத்தம் போடி பேட்டை பகுதியில் உள்ள கவுண்டன்யா மகாநதிஆற்றில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மணலை ஜலித்து மூட்டைகள் மூலம் கட்டி இருசக்கர வாகனத்தில் நூதனமுறையில் மணல் திருட்டு நடைபெற்று வந்த நிலை யில் இன்று குடியாத்தம் நகர போலீசார் மணல் திருட்டில் ஈடுபட்ட புவனேஸ்வரி பேட்டை பகுதியை சேர்ந்த சீனிவாசன் (வயது24) அருண் (வயது23) கிருபாகரன் (வயது21) உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக