புதிய நீதி கட்சி சார்பில், உலகம்போற்றும் உலகத் தலைவர் பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியின் 75ஆம் பிறந்தநாள் விழா!
குடியாத்தம் ,செப் 18 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் நகரம் புதிய நீதி கட்சியின் சார்பில், உலகம் போற்றும் உலகத் தலை வர் பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியின் 75ம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம், புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஏ.சி.சண்முகம் அவர்களின் நல்வாழ்த்துகளுடன், பாரத பிரதமர் மோடிஜியின் பிறந்தநாள் விழா, நகர செயலாளரும், கைத்தறி காவலனு மான எஸ்.ரமேஷ் தலைமையிலும், மண்டல செயலாளர் பி.சரவணன் முன்னிலையிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டதுஇதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் நகர தலைவர் எம்.கே.ஜெகன், மாவட்ட செய லாளர்கள் சாய்.எஸ்.ஆனந்தன், ஸ்ரீகாந்த், சுசில்குமார் புதிய நிதி கட்சியின் பொறுப் பாளர்கள் சசிகுமார், வெங்கடேசன், கன்னியப்பன், செந்தில்குமார், செல்வம், சுந்தர்ராஜன், மோகன், திருநாவுக்கரசு, கார்த்திகேயன், சி.வெங்கடேசன், ராமு, ஹேமலதா மற்றும் பாஜக நிர்வாகிகள் பிரபாகரன், கணேசன், பாலாஜி, இளங் கோ, ராஜா, மணிகண்டன் மற்றும் புதிய நீதி கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு பாரதப் பிரதமரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக