லக்னோவில் தங்கம், வெள்ளி வென்ற
ரிங் டென்னிஸ் வீரர்களுக்கு ஜோலார் பேட்டை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
திருப்பத்தூர் , செப் 8 -
லக்னோவில் தங்கம், வெள்ளி வென்ற ரிங் டென்னிஸ் வீரர்களுக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு!.
திருப்பத்தூர் மாவட்டம் லக்னோவில் ரிங் டென்னிஸ் போட்டியில் தங்கம், வெள்ளி வென்ற வீரர்களுக்கு ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது மகாராஷ்டிரா மாநிலம், லக்னோவில் ரிங் டென்னிஸ் போட்டி கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடைபெற்று உள்ளது. இந்த போட்டி களில் இந்தியா முழுவதிலும் இருந்து கிட்டத்தட்ட 12 மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் உட்பட 4 மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 26 பேர் அந்த போட்டியில் கலந்து கொண்டு உள்ளனர். அதில் சீனியர் மற்றும் சப் ஜூனியர் கோப்பைகளை பெற்று அதோடு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங் களை வென்றுள்ளனர்.இதனால் உற்சா கம் அடைந்த உறவினர்கள் லக்னோவில் இருந்து ரயிலில் வந்தவர்களுக்கு ஜோ லார்பேட்டை ரயில் நிலையத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து தமிழ்நாடு ரிங் டென்னிஸ் செயலாளர் ரத்திபிரியா கூறுகையில் தனி மற்றும் இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்து உள்ளார்கள் என்று பெருமிதத் தோடு தெரிவித்தார்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
மோ.அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக