உடுமலை ஸ்ரீ ஜிவிஜி மகளிர் கலை கல்லூரி சார்பாக மலைவாழ் பள்ளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட முகாம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

உடுமலை ஸ்ரீ ஜிவிஜி மகளிர் கலை கல்லூரி சார்பாக மலைவாழ் பள்ளி குழந்தைகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட முகாம்


திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம்

 ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை விரிவாக்க திட்டம் கீழ் பொருளாதார துறை மூன்றாம் ஆண்டு மாணவிகள் கோடந்தூர் மலைவாழ் பள்ளி மாணவ மாணவியருக்கு இன்னும் எழுத்து திட்டம் கீழ் முதல் பருவத் தேர்வுக்கான வினாக்களை ஆடல் பாடலுடன் மாணவ மாணவியருக்கு கற்பிக்கும் நிகழ்ச்சியினை வனக்காப்பாளர் பா.சேட்கருப்பசாமி துவக்கி வைத்தார் நிகழ்ச்சியின் வரவேற்புரையை தலைமை ஆசிரியர் கா.ஜோதிபாசு அவர்கள் ஆற்றினர் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி பொருளாதார துறை பேராசிரியர்கள் முனைவர் த. மணிமொழி கோ.வைஷ்ணவி மற்றும் மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியின் இறுதியில் தழிஞ்சி மற்றும் கோடந்தூர் அரசு மலைவாழ் மக்கள் பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்களான பேனா பென்சில் சிளேடு வாய்ப்பாடு கல்வி உபகரணங்கள் போடும் பாக்ஸ் போன்ற உபகரணங்களை அலுவலர்கள் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் கல்லூரி மாணவிகள் ஆகியோர் மாணவ மாணவியருக்கு வழங்கினர் நிகழ்ச்சியில் எண்ணற்ற கோடந்தூர் மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad