கடன் தள்ளுபடி, மின்சாரம், பாசன திட்டங்கள் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
தமிழ்நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்
தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ. காளிமுத்து தலைமையில், தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை மற்றும் கோரிக்கை கூட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கொ.ப.செ. கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் பச்சைத்துண்டு ராசு, பொதுச் செயலாளர் சுப்பிரமணியம், மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, தென்னிந்திய நதிகள் இணைப்புத் தலைவர் அய்யாக்கண்ணு, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிச்சாமி, கொங்குநாடு மக்கள் கட்சி ரத்தினம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முத்து விஸ்வநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக