குடிநீர் வரவில்லை என புகார் - வீட்டிற்குள் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களால் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 செப்டம்பர், 2025

குடிநீர் வரவில்லை என புகார் - வீட்டிற்குள் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களால் பரபரப்பு.

குடிநீர் வரவில்லை என புகார் அளித்ததால் வீட்டிற்குள் புகுந்து நீங்கள் எப்படி புகார் கூறலாம் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்களால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி 3-வது வார்டு மேலபெருவிளை பகுதியில் வீட்டிற்கு குடிநீர் வரவில்லை என்று அதிகாரிகளுக்கு புகார் அளித்ததை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் பிட்டர் ஜஸ்டின் என்பவர் அடியாள்கள் போல் 5- பேர் கும்பலாக பெண்கள் இருக்கும் வீடுக்குள் அனுமதி இல்லாமல் கேட்டை திறந்து சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து
 தண்ணீர் வருகிறது எதற்காக புகார் அளித்தீர்கள் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மாநகராட்சி ஊழியர்கள் ரவுடிகள் போல் கும்பலாக வீட்டின் கேட்டை திறந்து வீட்டில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி காண்போரை அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். 
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad