வேலூர் மாவட்டம் குடியாத்தம் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவ பெருவிழா!
குடியாத்தம் , செப் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் புது தெருவில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி 101ம் ஆண்டு பெரு விழா நடந்தது.முன்னதாக காலை 8.30 மணிக்கு வேணுகோபால் சுவாமி பஜனை கோயிலில் இருந்து நரசிம்மர் சாமி திருவீதி உலா முக்கிய வீதிகள் வழியாக வந்து ஊர் பெரிய தனம் கே எம் நடராஜன் இல்லத்தில் வந்து அடைந்தது
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்ன தான வழங்கப்பட்டது மீண்டும் இரவு 7 மணிக்கு கே எம் நடராஜன் இல்லத்திலிரு ந்து நரசிம்ம சாமி ஊர்வலம் வான வெடிப் புடன் நடந்து. வேணுகோபால்சாமி பஜனை கோயிலில் வந்தடையும். அனைவர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனம் கே எம் நடராஜன் மகேஸ்வரி மற்றும் குமரவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக