காதலனுடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடு மை செய்த மர்ம கும்பல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 செப்டம்பர், 2025

காதலனுடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடு மை செய்த மர்ம கும்பல்!

காதலனுடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடு மை செய்த மர்ம கும்பல்!
ராணிப்பேட்டை , செப் 8 -

ராணிப்பேட்டை மாவட்டம் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்ம கும்பல் இரவு நேரத்தில் தென்னந் தோப்பு அருகே அமர்ந்து தமது காதலுடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் தூக் கிச் சென்று பாலியல் வன்கொடுமை செ ய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. தெங்கால் பாலாற்றங்கரை பகுதி யில் அரசுக்கு சொந்தமான தென்னந் தோப்பு ஒன்று உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் குறை வாக இருக்கும் நிலையில் அவ்வப்போது இளைஞர்கள் கூடி மது அருந்தி வருவ தும், அந்த வழியாக வருபவர்களிடம் அவர்கள் சண்டையிடுவதையும் வழக்க மாக கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்றிரவு இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் தனிமையாக அமர்ந்து தனது காதலுடன்பேசிக் கொண் டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மூன்று பேர் கொ ண்ட கும்பலின் பார்வை அவர்கள் மீது விழுந்துள்ளது. உடனே அவர்களை வழி மறித்த மூன்று பேர் கொண்ட அந்த கும்பல் இளம்பெண்ணிடம் தகாத வார்த் தையில் பேசியுள்ளது. இதனை அந்த இளம்பெண்ணின் நண்பர் தட்டிக்கேட்டு ள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் இளம்பெண்ணின் நண்பரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை வலுக்கட் டாயமாக அங்கிருந்து தூக்கி சென்றுள் ளது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்த மூன்று பேரும் சேர்ந்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.பாலியல் வன் கொடுமைக் குள்ளான பெண் உடன டியாக அவரது வீட்டுக்கு சென்று, இச்சம்ப வம் குறித்து தனது பெற்றோருடன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்கை உடன டியாக ராணிப்பேட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். மேலும், மாவ ட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்து வருகின்றனர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம்
முதற்கட்டமாக சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்ற னர். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, "இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். சம்பவ த்தில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டு ப்பிடித்து சட்டத்தின் முன் நிற்க வைப் போம்" என்று தெரிவித்தனர் 

மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad