தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து!
ராணிப்பேட்டை , செப் 10 -
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழ் நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத் திற்கான விருது பெற்ற வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் அவர்களின் வாழ்த்து
தமிழ்நாடு அரசு, மாவட்ட / மாநகர அளவி லான சிறந்த காவல் நிலையங்களைஒவ் வொரு ஆண்டும் தேர்வு செய்து “தமிழ் நாடு முதலமைச்சரின் சிறந்த காவல்
நிலையத்திற்கான பரிசு வழங்கி வருகி றது அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டிற் கான சிறந்த காவல் நிலையமாக இரா ணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலா ஜாபேட்டை காவல் நிலையம் தேர்வு செய் யப்பட்டது. இதற்கான விருதை, காவல் நிலையம் சார்பாக ஆற்காடு கிராமிய கா வல் ஆய்வாளர் சாலமோன் ராஜா அவர் கள், கடந்த 06.09.2025 அன்று சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களிடம்
இருந்து பெற்றார்.மேற்கண்ட விருது பெற்ற ஆற்காடு கிராமிய வட்ட ஆய்வா ளர் சாலமோன்ராஜா அவர்களை, மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் பாராட்டி எப்போதும் சிறந்து
விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை உட்கோ ட்ட காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் அவர்கள் உடனிருந்தார்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக