சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் மண்டல அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரி முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர் ஆகியோரையும் கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ஜே ஜெயக்குமார் ரூபன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார், நிர்வாக அதிகாரி முனைவர் வினோதா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக