தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் அற்புத நகரில் அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம் உள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய பங்குத்தந்தை லாசர் தலைமை வைத்தார்.
தெற்கு கள்ளிகுளம் பனி மாதா மெட்ரிக் பள்ளி பங்கு தந்தை மணி அந்தோணிசாமி கொடி ஏற்றி வைத்து மறையுரை வழங்கினார். விழாவில் அருள் சகோதரிகள், திருவிழா பணிக்குழுவினர், ஊர் நிர்வாக குழுவினர் மற்றும் இறை மக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தினமும் காலை திருச்செபமாலை பவனி ,நவநாள் திருப்பலி, மாலையில் மறையுரை ,திவ்ய நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
9ம் நாள் திருவிழாவான வரும் 6ம் தேதி மாலை 6:30 மணிக்கு திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மை குரு செல்வ ஜார்ஜ் தலைமை வைத்து ஆராதனை நடத்துகிறார். பாளையங்கோட்டை மறை மாவட்டம் ஜோமிக்ஸ் மறையுரை வழங்குகிறார்.
இரவு 10 மணிக்கு அதிசய ஆரோக்கிய அன்னையின் அற்புத சப்பர பவனி நடக்கிறது. வரும் 7ம் தேதி 10ம் நாள் திருவிழா அன்று காலை 7 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி, உறுதிப்பூசுதல் அருள் சாசனம் நடக்கிறது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமை வகித்து திருப்பலி நிகழ்த்துகிறார்.
மாலையில் திவ்ய நற்கருணை பவனி, இரவு 9 மணிக்கு கொடி இறக்கம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை லாசர் மற்றும் திருவிழா பணிக்குழுவினர், நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.
தமிழை குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக