குடியாத்தம் ஒன்றியம் ஊராட்சியில் மக்களின் அடிப்படை வசதிக்காக உங்க ளுடன் ஸ்டாலின் திட்ட முகாம்!
குடியாத்தம் ,செப் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சின்னத்தோட்டாளம் குளித்திகை கீழ்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை ஊராட்சி மன்ற தலைவர்கள் சுமித்ரா. லோகேஸ்வரி. மோரி தலைமை நடைபெற்றது இந்த முகாமில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பி னர் அமலு விஜயன் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகானந்தம் முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்றனர் இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை முதியோர் ஓய்வூதியம் குடும்ப அட்டை இலவச வீட்டு மனை பட்டார்கள் பெயர் மாற்றம் மின் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக் களை முகாமில் கொடுத்தனர் இந்த முகாமில் ஒன்றிய செயலாளர் கள்ளூர் ரவி ஒன்றிய குழு உறுப்பினர் உஷா ராணி தமிழ் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவிதா மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பா ளர் முருகானந்தம் முகாமில் கலந்து கொண்டனர் முகாமில் பல்வேறு அரசு அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர் கள் சின்னத்தோட்டாளம் குளிதிகை கீழ்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொது மக்கள் என ஏராளமானோர் இந்த முகாமில் கலந்து கொண்டனர் இதில் ஊராட்சி செயலர்கள் தீபக்ராஜ் பிரபாகரன் முகாமில் கலந்து கொண்ட அனைவருக் கும் நன்றிதெரிவித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக