'மக்களை காப்போம் , தமிழகத்தை மீட்போம்' எழுச்சி பயணத்தை அதிமுக கட்சியின் பொது செயலாளர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் உடுமலை , மடத்துக்குளம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் தொடர்ச்சியாக பயணம் செய்ய உள்ளார். அதன்படி, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு வருகின்ற 11ம் தேதியன்று வருகை தரும் முன்னாள் முதல்வர் , எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பிரமாண்டமான வரவேற்பு அளிக்க அதிமுக கட்சியின் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
அதற்கான ஆலோசனைகள் கூட்டம் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய சி மகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் , கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக