கடலில் மூழ்கி காணாமல் போன மீனவர் உயிருடன் மீட்பு.
திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் கீழத்தெரு பொன்னுசாமி அவர்கள் மகன்சிவ முருகன் என்பவர் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் பணிக்கு சென்ற போது நேற்று அதிகாலையில் படகிலிருந்து கடலில் தவறி விழுந்துவிட்டார். அவரைத் தேடும் பணி நடைப்பெற்று வந்த நிலையில் இன்று இரண்டு நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டார். நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அவரை கூத்தங்குழி மீனவர்கள் மீட்டு இன்று அதிகாலை கரைக்கு கொண்டு வந்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக