கன்னியாகுமரி மாவட்டம் ரீத்தாபுரம் கடம்பறவிளையைச் சேர்ந்த AC மெக்கானிக் போஸ் அலெக்ஸ்(54). நேற்று (செப். 26) இவரது வீட்டில் உள்ள இன்வெர்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், போஸ் அலெக்ஸ் ஏற்கனவே இறந்ததாக கூறினர்.மனைவி, குழந்தைகள் கண் எதிரே மின்சாரம் தாக்கி ஏ.சி. மெக்கானிக் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பாக
குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக