ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்திற்காக கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த நெல் மூட்டைகள் நேற்று 42 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயில் மூலம் ஈரோடு ஜங்ஷன் சரக்குமுனையத்துக்கு வந்தடைந்தன. பின்னர், சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் ஏற்றப்பட்டு, ஈரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகள் அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக மாற்றம் செய்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர்
ம.சந்தானம்
ஈரோடு மாவட்டம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக