பனைமரம் வெட்ட தமிழக அரசு தடை விவசாய சங்க தலைவர் ஜி.கே.விவசாய மணி முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 25 செப்டம்பர், 2025

பனைமரம் வெட்ட தமிழக அரசு தடை விவசாய சங்க தலைவர் ஜி.கே.விவசாய மணி முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்


தமிழக அரசு பனை மரங்களை வெட்டுவதற்கு தடைவிதித்து அரசாணை வெளியிட்டுள்ளது இது குறித்து அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி என்கின்ற ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் அவர் தனது அறிக்கையில் பனைமரம் என்பது தமிழ்நாட்டின் பழமையான பாரம்பரியமான அடையாளம் மட்டுமின்ற தமிழர்களின் வாழ்வோடு கலந்த மரம் ஆகும் அது பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிஷம் ஆகும் பனை மரத்தின் வாழ்நாள் மனித வாழ்நாளை விட அதிகம் வீட்டிற்கு ஒர பனைமரம் வளர்க்க முடியாவிட்டாலும் அதை பாதுகாப்பதில் நாம் தனி கவனம் செலுத்த வேண்டும் பன மரங்களை காக்க பனை மரங்களை வெட்ட தடை தடை விதித்துள்ள தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad