ஆசிரியர் இல்லத்தில் இன்று ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்க சார்பில் ஆசிரியர் தின விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

ஆசிரியர் இல்லத்தில் இன்று ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்க சார்பில் ஆசிரியர் தின விழா!

ஆசிரியர் இல்லத்தில் இன்று ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச் சங்க சார்பில் ஆசிரியர் தின விழா!
வேலூர் , செப் 5 -

வேலூர் மாவட்டம் ஆசிரியர் இல்லத்தில் இன்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் ஆசிரியர் தின விழா இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலை மை தாங்கினார் இணை ஒருங்கிணைப் பாளர் ஜி.விநாயகம் வரவேற்று பேசி னார்.  முன்னதாக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்  
ஆசிரியர் இல்த்தின் பொதுச் செயலாளர் ஜி.செல்வ முத்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி பேசி னார் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலு வலரின் நேர்முக உதவியாளர் கே.கோ பாலகிருஷ் ணன், ஓய்வுபெற்ற பள்ளி துணை ஆய் வாளர் ஜி.ஆறுமுகம், ஆர். ரகுநாத் ஐ.உமா தேவன், எஸ்.ஜெயலட் சுமி எஸ்.சச்சுகு மாரி, ஆகியோர் முன்னி லை வகித்து பேசினார்கள்.  இல்ல செய லவை உறுப் பினர் அல்போன்ஸ் கிரி வாழ்த்தி பேசி னார்.ஆசிரியர்களுக்கு பாராட்டு உறுப்பினர்கள் எஸ்.குணாலன் எம்.தாமோதரன், சோகாராமன் இல.சீனி வாசன், பி.ஜெகநாதன், கே.பி.சிவஞானம், எஸ்.சச்சிதானந்தம், ஆர்.மகாலிங்கம், தனசேகரன், குணசேகரன், கே.சேகர், எஸ்.சுகுமார், டி.தேவராஜ், சு.பாலசுப்பிர மணி, ஆர்.பாண்டியன்,  உள்ளிட்ட அனை வருக் கும் பொன்னாடை போர்த்தி பாராட்டப் பட்டனர்.
பின்னர் பின்வரும் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது 
1.தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை போல ஓய்வு பெற்ற அனைவருக்கும் 80 வயது துவக்கத்திலேயே ஓய்வூதியத் தொகையினை 20 சதவிகிதம் உயர்த்தி வழங்க கோரியும் 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்கைள் அனைவருக்கும் 10 சதவிகிதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கிட கோரி தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.
2.ஓய்வூதிய தொகுப்பு (கமுடேசன்) தொ கையினை  பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக குறைத்திடுக
3.மூத்த குடிமக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய ஆந்திர மாநில அரசு 40 சதவிகித சலுகையில் பயணம் மேற்கொ ள்ள அனுமதி அளித்துள்ளது போல் தமிழ் நாடு அரசும் மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கோரி  தீர்மானிக்கப் பட்டது.
4.காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிக ளை களையவும் பணம் செலுத்தாமல் சிகிச்சை பெறக் கூடிய வகையில் புதிய காப்பீட்டு திட்டத்தினை நடைமுறைப்படுத் தவும் இத்திட்டத்தினை அரசே ஏற்று நடத் திட கோரியும் தீர்மானிக்கப்பட்டது.
5.காப்பீட்டு செலவினத்தொகை திரும்ப பெறும் நடைமுறைகளை எளிமைபடுத் திட கோருவது 6.ஓய்வூதியர்கள் அனை வருக்கு வருமான வரி செலுத்துவதிலி ருந்து விலக்களிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் செயற்குழு உறுப்பினர்   இல. சீனிவாசன் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad