தூத்துக்குடி மாவட்டத்திற்கு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 27.10.2025 உள்ளூர் விடுமுறை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 அக்டோபர், 2025

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு 27.10.2025 உள்ளூர் விடுமுறை.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2025-ம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 27.10.2025 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் அத்தியாவசிய பணிகள் பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி ((Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக 08.11.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad