காட்பாடியில் 7 சவரன் நகை, ₹2 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 அக்டோபர், 2025

காட்பாடியில் 7 சவரன் நகை, ₹2 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை!

காட்பாடியில் 7 சவரன் நகை, ₹2 லட்சம் பணம் கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை!
காட்பாடி, அக் 6 -

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஜாப்ரா பேட்டை வெள்ளக்காவா கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.அப்பகுதியைச் சேர்ந்த முருகேசன் – சாந்தம்மாள் தம்பதியர் வீட்டில் நேற்று இரவு முகமூடிகள்அணிந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் புகுந்து, அவர்களுடைய 7 சவரன் தங்க நகை மற்றும் ₹2 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர்.கும்பல், அவர்களின் 7 வயது பேரன் ரவியை கொலை செய்வதாக மிரட்டி, முருகேசன் மற்றும் சாந்தம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. காய மடைந்த இருவரும் ஊர் மக்களின் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
முருகேசன் அளித்த தகவலின் அடிப்படை யில், அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் என்ற நபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. போலீசார் பெருமாளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தை டிஎஸ்பி பழனி மற்றும் டோரா   போலீசார் மோப்ப நாய் அணியும் வந்து ஆய்வு செய்தது. வருகின்றனர்
இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad