குடியாத்தம், மேல்முட்டுக் கூரில் கிராம சபா கூட்டம் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு!
குடியாத்தம் , அக் 11 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா, மேல்முட்டுக்கூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சுந்தர் தலைமையிலும், துணை தலைவர் நித்யாவாசு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப் பாளராக கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஜெகன்மூர்த்தி, கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு ஊராட்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உள்ளி கூட்ரோட்டில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் திடக்கழிவுக்கிடங்கு மக்குப்பை கிடங்கை ரத்து செய்யவேண்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்புவதாக வந்த தகவலின் அதையும் தடை செய்ய வேண்டி அப்பகுதிமக்கள் எம்.எல்.ஏயிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி மக்களின் குறைகளை கேட்டறிந்து மக்குப்பை கிடங்கை எம்எல்ஏ ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்தி த்து கூறும்போது குடியாத்தம் நகர பகுதி யில் இருந்து மக்குப்பைகளை இந்த இடத் தில் தரம் பிரித்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் குப்பை கிடங்கில் சுற்றி உள்ள 6 கிராமங்கள் உள்ளன இந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் இங்கு உள்ள விவசாய நிலங்கள், பொதுமக்கள் குடிநீர் நிலத்தடி நீர் பாதிப்பு, குடிநீர் விஷத்தன்மை கொண்டதாக மாறிவிடும், மக்களுக்கு இந்த துர்நாற்றத்தால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பாக உள்ளது. இதை நான் சட்டமன்ற கூட்டத் தொடரில் கொண்டு செல்வேன், மக்கள் நலன்கருதி மக்களுக்காக மக்கள் கோரிக்கைகளை ஏற்று இதனை கண்டிப்பாக நடைமுறைப் படுத்துவேன் என கூறினார் இந்நிகழ் வின் போது பொதுமக்கள் புதிய பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மேகநாதன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் உடனிருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக