குடியாத்தம் அடுத்த வளத்தூர் ஊராட்சி யில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 11 அக்டோபர், 2025

குடியாத்தம் அடுத்த வளத்தூர் ஊராட்சி யில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் !

குடியாத்தம் அடுத்த வளத்தூர் ஊராட்சி யில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் !
குடியாத்தம் , அக் 11-

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, வளத்தூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக எஸ். நிர்மலா சேட்டு தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபா கூட்டத்தில் திரளான பொது மக்கள் கலந்து கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்க ளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ் பிரியா சக்திவேல், ஊராட்சி மன்ற உறுப்பினர் கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர் ஆர். விஜயேந்திரன், ஊராட்சி செயலா ளர் ஆர்.ரேவதி, அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்னாள் இணை இயக்குநரும், சமூக சேவகர்மான இ.சேகரன், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு கிராம சபா கூட்டத்தை சிறப்பித்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad