வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் விதைப்பந்து . தயாரிக்கும் நிகழ்ச்சி!
குடியாத்தம் , அக்10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரியில் இன்று
7.5 லட்சம் விதை பந்துகளை மாவட்டம் முழுவதும் உள்ள மலைகளில் வீச விதை பந்துகளை தயாரித்து வருகிறோம்.
இதன் அடுத்த கட்டமாக குடியாத்தம் திருமகள் கலைக்கல்லூரியில் இன்று 4 லட்சம் விதை பந்துகள் தயாரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை குடியாத்தம் சட்ட மன்ற உறுப்பினர், அமுலு விஜியன் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் குடியாத்தம் வட்டாட்சியர் பழனி சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர். 1000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விதை பந்துகளை தயாரித்தனர்.
குடியாத்தம் தாலுக்கா
செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக