நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை!
காட்பாடி ,அக் 15 -
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகி ன்றனர். சோதனை முடிவில் மிரட்டல் பொய்யானது என தெரிவித்தனர் .கடந்த சில நாட்களாக தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக