ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 21 அக்டோபர், 2025

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி!

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப் பாளர்  மலர் வளையம் வைத்து அஞ்சலி!
ராணிப்பேட்டை , அக் 21

ராணிப்பேட்டை மாவட்டம் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு ராணிப் பேட்டை ஆயுதப்படை தலைமையகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர் கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் கடந்த 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் 'ஹாட் ஸ்பிரிங்ஸ்' என்னுமிடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குத லில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர் ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்க ளில் பணியின் போது வீரமரணம் அடை ந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று (21.10.2025) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல் துறையில் வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகத் தை நினைவு கூறும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அய்மன்ஜமால்  தலைமையில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி பின் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது அதைத் தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.வீரவணக்கம் நாளை முன்னிட்டு போலீசார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற னர்.உடன் துணைக் காவல் கண்காணிப் பாளர் வெங்கடகிருஷ்ணன் (IUCAW), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad