காட்பாடியில் ஜேக்டோ-ஜியோ பேரமைப் பினர் கோரிக்கை அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 அக்டோபர், 2025

காட்பாடியில் ஜேக்டோ-ஜியோ பேரமைப் பினர் கோரிக்கை அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!

காட்பாடியில் ஜேக்டோ-ஜியோ பேரமைப் பினர் கோரிக்கை அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம்!
காட்பாடி , அக் 16 -

வேலூர் மாவட்டம்  ஜேக்டோ-ஜியோ பேர மைப்பின் சார்பில் தேர்தல் கால வாக் குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் நடைமுறைபடுத்த கோருதல், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை களை நிறைவேற்றிட கோரி இன்று 16.10.2025 மாலை  5.00 மணியளவில் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே கோரிக்கை அட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தாங்கினார். 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க செயலாளர் ஜி.டி.பாபு, வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட வி.திருக்குமரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் கே.தனசேகர், தலைமைநிலைய செயலாளர் ரகுராமன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் தமிழ் செல்வன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் காட்பாடி வட்டார செயலாளர் ஜி.தெய்வசிகாமணி, மாவட்ட துணை செயலாளர் ஹரிபாபு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் குமரவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.தேர்தல் கால வாக்கு றுதிகளை நிறைவேற்று நிறைவேற்று, பழைய ஒய்வூதிய திட்டத்தினை உடன டியாக நடைமுறைபடுத்து, ஊதிய முரண் பாடுகளை களைந்திடுக நிறைவேற்ற மறுப்பாயானால் போராட்டங்கள் தீவிரா மாகும் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.முடிவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மகளிர் செயலாளர் சிவகாமி நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad