இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்தி வரும் வாக்குத்திருட்டை கண்டித்து கையெழுத்து இயக்கம்!
குடியாத்தம் , அக் 5 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்தி வரும் வாக்குத்திருட்டை கண்டித்து வேலூர் மத்திய மாவட்டம் குடியாத்தம் நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்கம் இன்று (05.10.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை குடியாத்தம் பழைய பேருந்து நிலையத் தில் துவக்கப்பட்டது நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலை வர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கி னார். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக் குழு உறுப்பினர்கள் விஜயேந்திரன், சரவணன், யுவராஜ், இலியாஸ் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக் குழு உறுப்பினர் டாக்டர். நவீன் பிரபு அனைவரையும் வரவேற்றார் நிகழ்வில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் திருமதி. கிருஷ்ணவேணி ஜலந்தர், மாவட்ட பொதுச் செயலாளர் பாரத். நவீன்குமார், பேரணாம்பட்டு நகர தலைவர் முஜம்மில் அஹ்மத், பள்ளிகொண்டா பேரூர் தலைவர் அக்பர் பாஷா, RGPRS மாவட்ட தலைவர் ஆனந்தவேல், பள்ளிகொண்டா பேரூர் பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தனசேகரன், தாண்டவமூர்த்தி, வட்டார பொறுப்பாளர் ஆரோன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாநில எஸ்ஸி பிரிவு பொதுச் செயலாளர்கள் சுரேஷ், சுப்பிரமணி, காத்தவராயன், மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் பொறியாளர். சுனில், RGPRS மாநில துணைத்தலைவர் ராஜசேகரன், மகளிர் காங்கிரஸ் சார்பில் பாரதி மற்றும் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, மனோகரன், மணிவேல், ரஜினிகாந்த், ஸ்டாலின், புஷ்பாகரன், ஜலந்தர், மனோகரன், மன்னன், முனுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து. கொண்டனர்
முடிவில் குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றியுரை கூறினார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக