திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வாராந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கலந்தாய்வு கூட்டத்தில் இயலாமையை இல்லாமல் ஆக்குவோம் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டது சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி கே விவசாய மணி அவர்கள் தனது உரையில் இயலாமையை இல்லாமல் ஆக்குவோம் என்ற தலைப்பில் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சங்க நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் பெண்களுக்கும் எடுத்து கூறினார் குடும்ப வாழ்வியல் முறை குடும்ப முன்னேற்றம் விடாமுயற்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெளிவாக அனைவரும் பின்பற்றக்கூடிய வகையில் அறிவுரைகளை வழங்கினார் விழா முடிவில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக